தீபாவளியை போல
போர்முனையில் வெடிக்கும்
ஆயிரம் சரங்கள்
வீடு திரும்பும் நாள் வருமா
என்று வீரர்களின் ஏக்கங்கள்
நாட்டில் அவர் செய்ய
காத்திருக்கும் பல ஆக்கங்கள்
எப்போது வெடிக்குமோ என்று
விழித்திருந்து விட்ட தூக்கங்கள்
அதனால் அவர் உடலில்
ஏற்பட்ட பல தாக்கங்கள்
நிரைவேறாமல் போன பல
நல்ல உள்ளங்களின் நோக்கங்கள்
அதற்காக ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள்
உள்ளக் கூக்குரல் கே ட்காமல்
சண்டையிடும் செவுடுகள்
கத்திப் பேசினாலும் யாரும்
கேட்காமல் காய்ந்த உதடுகள்
இதெல்லாம்
கடவுள் இந்த ஈழத்திற்கு தந்த வரங்கள்...!


0 comments:

Post a Comment